Read Sri Araalakesi Lyrics in Tamil | ஸ்ரீ அராளகேசிஊஞ்சல் பாடல் வரிகள் information

Check Sri Araalakesi Lyrics in Tamil | ஸ்ரீ அராளகேசிஊஞ்சல் பாடல் வரிகள் from Religious bhajan section on e akhabaar

ஸ்ரீ அராளகேசிஊஞ்சல் பாட்டு – Sri Araalakesi Lyrics in Tamil

அருளோடு பொருள் தந்து ஆதரிக்கும் அம்மா

அழகான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா

இருள் நீக்கி ஒளிதந்து எமைகாக்கும் அம்மா

இனிதான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா

அவமாயை அகற்றும்நல் அம்பிகையே நீதான்

அழகான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா

நவ இரவில் நாங்கள் கண்டுகளித்திடவே அம்மா

நவரத்ன பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா

நாமகளாய் முதல் மூன்று நாளிரவில் வந்து நற்கல்விகலை யெல்லாம் நல்கிடுவாய் அம்மா

இடைமூன்று நாளிரவில் இலக்குமியாய் வந்து

இகபோக செல்வங்களை எமக்களிப்பாய் அம்மா

வெற்றி தரும் செல்வியாய் வீரசுகுமாரியாய்

கடைமூன்று இரவினிலே காட்சி தரும் அம்மா

ஒருபாதி சிவனாக மறுபாதி உமையாக

சிவகாமி தேவி பொன்னூஞ்சல் ஆடு

விண்ணோரும் மண்ணோரும் விரும்பி உனைத்துதிக்க வண்ணமலர் பொன்னூஞ்சல் வந்தாடு அம்மா

பாரிஜாதம் மணக்க பவளக்கொடி ஊஞ்சலிலே

பார்வதியே பாலாம்பா பாங்குடனே ஆடு

நம்புமடியார்கள் வினை நாளும் தீர்ப்பவளே

செம்பவளக்கொடி ஊஞ்சல் தனிலாடு அம்மா

அருட்பெருஞ்ஜோதியே அராளகேசி உமையே ரத்னகிரீசருடன் பொன்னூஞ்சல் ஆடு

Post your comments about Sri Araalakesi Lyrics in Tamil | ஸ்ரீ அராளகேசிஊஞ்சல் பாடல் வரிகள் below.