Read Pullanguzhal Kodutha Lyrics in Tamil | புல்லாங்குழல் கொடுத்த பாடல் வரிகள் Pdf

Check Pullanguzhal Kodutha Lyrics in Tamil | புல்லாங்குழல் கொடுத்த பாடல் வரிகள் from Religious section on e akhabaar

புல்லாங்குழல் கொடுத்த பாடல் வரிகள்  – Pullanguzhal Kodutha Lyrics in Tamil

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்


புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்


வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே – எங்கள்


மதுசூதனன் புகழ் பாடுங்களேன்


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்


புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்….

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்


பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்


தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்


ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்…


எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் …

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்


புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு


கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் – அந்த


திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த


ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…


அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…

பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் – அந்த


பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் (2)


பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் – நாம்


படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…


நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்


புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…

கிருஷ்ணன் 108 போற்றி

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள்

கிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம்

Post your comments about Pullanguzhal Kodutha Lyrics in Tamil | புல்லாங்குழல் கொடுத்த பாடல் வரிகள் below.